கருவுற்றிருக்கும் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடலாம்? எதையெல்லாம் சாப்பிடக் கூடாது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சாப்பிட வேண்டியவை
1. இட்லி, தோசை, சப்பாத்தி, ஓட்ஸ், சம்பா கோதுமை ரவா உப்புமா ஆகியவற்றைக் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
2. கோழிக்கறி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றையும் காலையில் சாப்பிடலாம்.
3. மாலை வேளையில் பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என ஏதாவது ஒரு முளைகட்டிய தானியத்தை, அரை வேக்காடாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
4. எள் உருண்டையில் இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை இருப்பதால், ஆறாவது மாதத்தில் இருந்து அதனைச் சாப்பிடலாம்.
5. கருவுற்ற பெண்கள் பால், காபி ஆகியவற்றில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்து விட வேண்டும்.
6. மோர், வெள்ளரி, மாங்காய், காய்கறி சூப் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
7. கருவுற்றிருக்கும் காலத்தில் உடலில் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தர்பூசணி, பேரிக்காய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
8. கருவுற்றிருக்கும் பெண்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் குடித்தால், குழந்தையின் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். மோர், தயிர், இளநீர் ஆகியவற்றையும் பருகலாம்.
சாப்பிடக் கூடாதவை
1. எண்ணெய் பதார்த்தங்களை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும். எப்போதும் குறைந்த அளவிலேயே எண்ணெய்யைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. மதிய நேர உணவில் கட்டாயம் தேங்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவு நேரத்தில் கீரை, முட்டை ஆகியவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.
3. குளிர்பானங்கள், வெல்லம், பேரீச்சம்பழம், மாம்பழம், சீத்தாப்பழம், வாழைப்பழம், கேரட், பீட்ரூட், வாழைக்காய் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
4. அப்பம், இடியப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரட், பூரி, புரோட்டா, சேமியா, பொங்கல், கிழங்கு ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
5. ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.